டெஸ்ட் அரங்கில் மதிப்பு மிக்க ஆஷஸ் தொடர் தற்போது நடந்து முடிந்த நிலையில் இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வீழ்த்தி முன்னிலை பெற்றது. இந்த தொடரில் தொடர் நாயகன் விருது கிரிஸ் வோக்ஸ்க்கு வழங்கப்பட்டது.
கிரிஸ் வோக்ஸ் போன்ற வீரர் வேறு எந்த அணியில் இருந்தாலும் பிளேயிங் லெவனில் முதல் மூன்று வீரர்களில் ஒருவராக இருந்திருப்பார் என இந்திய அணி வீரர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ”கிரிஸ் வோக்ஸ் போன்ற வீரர் எப்படி இங்கிலாந்து அணிக்கு உள்ளே வெளியே என்று போயும் வந்தும் கொண்டே இருந்தார் என நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் வேறு எந்த அணியில் இருந்தாலும் பிளேயிங் லெவனில் முதல் மூன்று வீரர்களில் ஒருவராக இருந்திருப்பார்.
இவரைப் பார்க்கும் போது எப்படியா உனக்கு மட்டும் எல்லாம் வருது என பொறாமை வரவைக்கக்கூடிய வீரர் அவர். இப்போது பிராட் ஓய்வு பெற்றிருக்கும் பொழுது, இனி இவருக்கு அணியில் நிரந்தர இடம் உண்டு என்று தெரிகிறது. அதே நேரம் இவர் நிரந்தரமாக அணியில் இருந்தால், இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப் மிகவும் நீளமாகிவிடும் என்று ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது! “ என்று கூறியுள்ளார்.