fbpx

நாளை முதல் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு..!! திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு..!! பார்வையாளர்கள் அதிர்ச்சி..!!

திரையரங்குகளில் கட்டணம் உயர்த்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் 30 ரூபாய் வரை சினிமா டிக்கெட் கட்டணம் உயர்கிறது.

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதுச்சேரியில் 2020 ஆம்ஆண்டு அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் போது மக்கள் நலன் கருதி டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு மனு அளித்தனர். இதனை ஏற்று கட்டண உயர்வுக்கான உத்தரவை ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ளார். அதன்படி, 3ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், 2ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய் ஆகவும், முதலாம் வகுப்பு 100இல் இருந்து 130 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. 160 ரூபாய் என இருந்த பாக்ஸ் டிக்கெட் 180ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ரூபாய் அதிகபட்சம் 30 ரூபாய் என உயர்த்தப்படுறது. இந்தக் கட்டண உத்தரவு நாளை (வெள்ளிகிழமை) முதல் அமலுக்கு வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Chella

Next Post

தீபாவளி பண்டிகை..!! போனஸ் அறிவிப்பு..!! யாருக்கு தெரியுமா..? தமிழ்நாடு அரசு குட் நியூஸ்..!!

Thu Nov 9 , 2023
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை பரிசாக 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே தற்காலிக தொகுதி அடிப்படையில் பணியாற்றும் […]

You May Like