fbpx

தேசிய சினிமா தினம் :ரூ.75 சலுகை விலை டிக்கெட்டை நீங்க மிஸ் பண்ணிட்டீங்களா? .. இதோ உங்களுக்கு குட்நியூஸ்..

தேசிய சினிமா தினமான நேற்று ரூ.75க்கு சலுகை விலையில் டிக்கெட் அறிவித்தும் நீங்க வாங்க தவறியிருந்தால். உங்களுக்கு மறுபடியும் அந்த வாய்ப்புகாத்துக்கிட்டு இருக்கு…

தேசிய சினிமா தினம் செப்டம்பர் 23 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று சினிமா டிக்கெட்ஒன்றின் விலை ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நேற்று கூட்டம் திரையரங்குகளில் நிரம்பி வழிந்தது. பொதுவாக வார நாட்களில் குறைவாகவே பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால் நேற்று வழக்கத்திற்கும்மாறாக கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் நேற்று அந்த ரூ.75 டிக்கெட் வாய்ப்பை பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மல்டிபிலெக்ஸ் தியேட்டர்கள் வரும் திங்கள், செவ்வாய், புதன் , வியாழக்கிழமை ஆகிய 4 நாட்களிலும் ரூ.75 என்ற விலையிலேயே திரைப்பட டிக்கெட்டுகள் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

இதனிடையே சில மூவி மேக்ஸ் திரை அரங்ககங்கள் இன்று நாளை  மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.70க்கு டிக்கெட் கிடைக்கும் என அறிவித்துள்ளது. அதே சமயம் சில திரையரங்கங்கள் ரூ.100க்கும் விற்பனை செய்கின்றது.

இதனிடையே நேற்று ஒரே நாளில் 6.5 மில்லியன் பேர் திரையரங்குகளில் படம் பார்த்துள்ளதாக மல்டிப்லெக்ஸ் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது. சினிமா தினத்தை ஒட்டி டிக்கெட் விலையை கணிசமாக குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் . நேற்று காலை 6 மணி முதலே தியேட்டர்களில் வெவ்வேறு படங்களுக்கு டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதியது. அனைத்து தரப்பு வயதினரும்திரை அரங்குகளில் படத்தை கண்டுகளித்தனர் என்று மல்டிபிலெக்ஸ் தெரிவித்துள்ளது.

Next Post

உங்களுக்கு உற்சாகமான செய்தி நாளை சொல்லப்போகின்றேன்…. தோனி வைக்கும் சஸ்பென்ஸ் எதற்காக ? …

Sat Sep 24 , 2022
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி நாளை ஒரு உற்சாகமான செய்தி அறிவிக்கப்போவதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி உற்சாகமான செய்தி ஒன்றை நாளை பகிர்ந்துகொள்ள உள்ளதாக கூறியுள்ளார். நாளை மதியம் 2 மணி அளவில் இந்த தகவலை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.இதனால் ரசிர்கள் எதற்காக இந்த சஸ்பென்ஸ் என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று 2 […]

You May Like