fbpx

வாட்ஸ் அப் குரூப்பில் 10ஆம் வகுப்பு மாணவிகள்..!! இரவு நேரத்தில் ஒவ்வொருவராக..!! ஆசிரியருக்கு தர்ம அடி..!!

வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு இரவு நேரத்தில் வீடியோ கால் செய்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரை, மாணவிகளின் பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பரணி என்பவர் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது பள்ளியில் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும், செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழுவில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள சில மாணவிகளை மட்டும் அறிவியல் ஆசிரியர் தனியாக இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி கூறியுள்ளார்.

வாட்ஸ் அப் குரூப்பில் 10ஆம் வகுப்பு மாணவிகள்..!! இரவு நேரத்தில் ஒவ்வொருவராக..!! ஆசிரியருக்கு தர்ம அடி..!!

இதனை அறியாத பள்ளி மாணவிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் வந்துள்ளனர். அப்போது ஆசிரியர் அந்த மாணவியிடம் பாடம் குறித்து பேசுவது போன்று பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியுள்ளார். அதன் பிறகு மாணவி வீடியோ காலை கட் செய்துள்ளார். அதன் பிறகு மற்ற மாணவிகளை வீடியோ காலில் வரகூறி அவர்களிடமும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவிகள் தங்களிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் பரணிக்கு தர்மஅடி கொடுத்தனர்.

வாட்ஸ் அப் குரூப்பில் 10ஆம் வகுப்பு மாணவிகள்..!! இரவு நேரத்தில் ஒவ்வொருவராக..!! ஆசிரியருக்கு தர்ம அடி..!!

மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து பள்ளிக்கு சென்று பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் ஆசிரியர் பரணியை கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு காவல் நிலையத்தில் ஆசிரியர் பரணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

இன்று 244 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து...! இந்திய ரயில்வே அறிவிப்பு...!

Sun Jan 8 , 2023
வட இந்தியாவில் தொடர்ந்து குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி நிலவி வருவதால் பராமரிப்பு தொடர்பான பணிகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்திய ரயில்வே இன்று 244 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 8ஆம் தேதி புறப்பட வேண்டிய 83 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வழக்கமான செயல்பாட்டு மற்றும் பொறியியல் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறது. […]

You May Like