மதுரை மாவட்டம், ஆனையூரிலிருந்து அனுப்பானடி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் இன்று பள்ளி செல்வதற்காக மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அதிவ் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபாகரன் என்பவர் பேருந்தின் முன் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து பெத்தானிபுரம் அருகில் வந்த போது வளைவில் திரும்ப முயன்ற போது பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்த மாணவன் பிரபாகரன் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். விழுந்தவரின் தலை மீது பேருந்தின் பின்புற சக்கரங்கள் ஏறு இறங்கியது. இதனால் பள்ளி மாணவன் பிரபாகரன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திடீர் நகர் காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.