fbpx

“பரபரப்பு.. இனி விநாயகர் சதுர்த்திக்கு கட்டணம்..” வெளியான அதிரடி உத்தரவு.!

விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையின் போது விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைப்பது வழக்கம். இதுபோன்று கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தி சிலைகள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் ஆர்வலரான ஹரிகரன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் மதுரை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விளம்பரப்படுத்தவும் விநாயகர் சதுர்த்தி வருவதற்கு முன்பே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்படுத்த முடியும் எனவும் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்

இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தின் வழிமுறைகளை பின்பற்றி
வருவதாகவும் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தது. தமிழக அரசு மற்றும் மனுதாரர் ஆகியோரின் வாதங்களைக் கேட்டறிந்த தேசிய தீர்ப்பானையம் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கட்டணம் வசூலிக்கும்படி அரசை வலியுறுத்தி இருக்கிறது.

மேலும் இது தொடர்பாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள தென் மண்டல தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழக்கும்போது அதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்தக் கட்டணத்தை நீர்நிலைகளின் பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துமாறும் தெரிவித்துள்ளது. மேலும் அனுமதி வழங்கப்படாத இடத்தில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு வசூலிக்கப்படும் அபராதத்தை அந்த நீர் நிலைகளை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Next Post

"எண்ணி 28 அமாவாசை தான் திமுக ஆட்டம் க்ளோஸ்."! முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

Thu Jan 25 , 2024
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்தும் திமுக நிர்வாகிகள் குறித்தும் பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது மன்னராட்சி நடக்கிறதா அல்லது மக்களாட்சி நடக்கிறதா என்று எண்ண முடியாத அளவிற்கு ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பல அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். தாங்கள்தான் தமிழகத்தை நிரந்தரமாக ஆளப்போகும் கட்சி என்று நினைப்பில் […]

You May Like