fbpx

ரஷ்ய அதிபர் புடினை படுகொலை செய்ய சதித்திட்டம்.. பின்னர் நடந்தது என்ன..? பரபரப்பு தகவல்..

ரஷ்ய அதிபர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும், அதிலிருந்து அவர் தப்பி பிழைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

யூரோ வீக்லி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. எவ்வாறாயினும், இந்த முயற்சி எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.. புடினின் காரின் முன் சக்கரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், புகை வெளியேறியதால், அதிபரின் கார், அதிவிரைவாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று அந்நிறுவனம் செய்தி வெளியிட்டது.. இந்த படுகொலை முயற்சி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளாடிமிர் புடின் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே உஸ்பெகிஸ்தானில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை விளாடிமிர் புடின் இன்று சந்திக்க உள்ளார், அங்கு இரு தலைவர்களும் பிராந்திய பாதுகாப்புக் குழுவான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்..

புடினை கொல்வதற்கான முயற்சி நடைபெறுவது இது முதன்முறையல்ல.. 5 படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக புடின் கடந்த 2017-ம் ஆண்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தம்பி மகன் போலீஸ் மீது தாக்குதல் …. ரத்தம் சொட்ட டிராபிக் போலீஸ் மருத்துவமனையில் அனுமதி …..

Thu Sep 15 , 2022
சேலம் மாநகர போக்குவரத்து காவலரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் படுகாயம் அடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   சேலம் மாநகர போக்குவரத்து காவலராக பாண்டியன் (42) என்பவர் பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இளைஞர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். செல்போனில் […]

You May Like