fbpx

மனைவிக்கு தொடர்ந்து தொல்லை; தட்டி கேட்க சென்ற கணவனுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம்..!

தானே ராபோடி பகுதியை சேர்ந்தவர் பர்வேஜ் (41). இவர் நேற்று முன்தினம் மும்பை சாந்தாகுருஸ் பகுதிக்கு வந்திருந்தார். அங்கிருந்த சையத் அகீல் (40) என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர், அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சையத் அகீல் அவர் வைத்திருந்த கத்தியால் பர்வேஷ் சேக்கை சராமாரியாக குத்தியுள்ளார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கத்திக்குத்தில் காயமடைந்த பர்வேஷ் சேக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.‌ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பர்வேஷ் சேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சையத் அகிலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கல்லூரி காலத்தில் பர்வேஷ் சேக்கின் மனைவியுடன் சையத் அகீல் பழகி உள்ளார். இதை காரணம் காட்டி அந்த பெண்ணை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு துன்புறுத்தி வந்தார். மன உளைச்சலுக்கு உள்ளான, பெண் தனது கணவர் பர்வேஷ் சேக்கிடம் கூறியுள்ளார். எனவே பர்வேஷ் சேக் அவரை நேரில் சந்தித்து தட்டி கேட்க மும்பை வந்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Baskar

Next Post

’கரந்த பால் மடியேறாது... கருவாடு மீனாகாது’.! நடிப்பில் ரஜினி, சிவாஜியை தோற்கடிக்கும் ஓபிஎஸ்.!

Sun Aug 28 , 2022
”ஓபிஎஸ் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்றிருப்பார்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். தொண்டர்களை நம்பி அதிமுக தொடங்கப்பட்டதே தவிர, தலைவர்களை நம்பியோ, எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை நம்பியோ தொடங்கப்படவில்லை. அதிமுகவை தொண்டர்களை நம்பித்தான் தலைவர் எம்ஜிஆர் தொடங்கினார். பன்னீர்செல்வம் உத்தமன் போல பேசும் மகா […]
’தினகரனோடு சேர்ந்து பாழாய்போன ஓபிஎஸ்’..! பாட்டு பாடி கலாய்த்த ஜெயக்குமார்..!

You May Like