fbpx

தமிழகத்திற்கு தொடரும் அலெர்ட்..!! இடி, மின்னலுடன் மிக கனமழை..!! – இந்திய வானிலை ஆய்வு மையம்

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தொடரும் அலெர்ட்..!! இடி, மின்னலுடன் மிக கனமழை..!! - இந்திய வானிலை ஆய்வு மையம்

நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த முன் அறிவிப்பின் அடிப்படையில், இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

தமிழகத்திற்கு தொடரும் அலெர்ட்..!! இடி, மின்னலுடன் மிக கனமழை..!! - இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கையின் அடிப்படையில், வடதமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்க்ளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தொடரும் அலெர்ட்..!! இடி, மின்னலுடன் மிக கனமழை..!! - இந்திய வானிலை ஆய்வு மையம்

வடதமிழகத்தின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரக்கூடிய 4 நாட்களுக்கு பரவலாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’வந்தாச்சு மழை சீசன்’..!! காய்ச்சல் வந்தால் என்ன செய்வது..? உடனடி தீர்வு இங்கே..!!

Tue Oct 11 , 2022
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மழைக்கால நோய்களும் மக்களை பாதிக்கச் செய்துள்ளது. கொசுக்களால் தான் அதிகளவு நோய் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சளி, காய்ச்சலால் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சுகாதாரமாக இருந்தால் இப்பிரச்னையை தவிர்க்கலாம். ஒருவேளை காய்ச்சல் வந்தவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை… * […]

You May Like