fbpx

தொடரும் ரயில்நிலைய கொலைகள்..!! பட்டப்பகலில் அண்ணனை குத்திக்கொன்ற தம்பி..!! பயணிகள் அச்சம்..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் மின்சார ரயில் ஒன்று பயணிகளுடன் சென்ட்ரல் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அந்த ரயிலில் முரளி (44) என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதே ரயில் பெட்டியில் பயணித்த ரவீந்தர் (38) என்ற வாலிபர் முரளியை சரமாரி கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து சென்று ரவீந்தரை கைது செய்தனர். பின்னர் உயிருக்கு போராடிய முரளியை மீட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முரளியை பரிசோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

பின்னர், ரயில்வே போலீசார் முரளியின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.‌ முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட முரளியும், பிடிப்பட்ட ரவீந்தரனும் அண்ணன், தம்பி என்பதும் சொத்துத் தகராறில் அண்ணனை கொன்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரவீந்தரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

மன்னிப்பு கேட்ட மன்சூருக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா..!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

Fri Nov 24 , 2023
நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் நடிகை த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார். நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் வலுத்தன. நடிகை த்ரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்திருந்தார். மேலும், நான் அவ்வாறு தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுத்து […]

You May Like