fbpx

தொடரும் பதற்றம்..! ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!

ஆப்கானிஸ்தானில் இன்று காலை, 5.2 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், மேற்பரப்பிலிருந்து 120 கி.மீ கீழே மற்றும் அட்சரேகை 36.33 மற்றும் தீர்க்கரேகை 70.70 இல் உருவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவம் இல்லை.

கடந்த அக்டோபர் மாதம் மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலத்த நிலநடுக்கங்களால் 2000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், 6 கிராமங்கள் அழிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டதை தொடர்ந்து அச்சம் அதிகரித்துள்ளது.

Kathir

Next Post

பாதுகாப்பான டாப் 10 நகரங்கள்!… அடுத்தடுத்த இடங்களை பிடித்த தமிழ்நாடு மாவட்டங்கள்!

Tue Dec 12 , 2023
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 78.2 என்ற குற்ற விகிதத்துடன் (IPC rate) இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக நீடிக்கிறது. இந்தியாவில் பல நகரங்கள் பாதுகாப்பாக வசிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த நகரங்கள் குறைந்த குற்ற விகிதங்கள் அடிப்படையில் பாதுகாப்பானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை அங்கு வசிப்பவர்களுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு […]

You May Like