fbpx

தொடர் கனமழை..!! 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!! குஷியில் மாணவர்கள்..!!

கனமழை காரணமாக கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இராணி தாலுக்காவில் உள்ள குரும்பன்மொழி பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் 250 ஆதிவாசி குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணியார் அணை திறக்கப்பட்டுள்ளதால், பம்பை நதி, கக்கட்டாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தொடர் கனமழையால் கண்ணூர், திருசூர், கோட்டயம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்திலும் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த மாவட்டத்தில் உள்ள பெருந்தேனருவி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஓட்டலில் உணவு வகைகளின் விலை உயருகிறது..!! விலைவாசி உயர்வால் ஓனர்கள் அதிரடி முடிவு..!!

Wed Jul 5 , 2023
எகிறி கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு நடுவே, ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து முக்கிய கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி செல்கிறது. அதேபோல, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை […]

You May Like