fbpx

தொடர் கனமழை..!! உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்..!! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர், அடையாறு ஆற்றில் கலந்து கடலை அடைவது வழக்கம்.

இந்நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் நேற்றிரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 22 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது தண்ணீரின் அளவு 3.200 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 500 கன அடியாக உள்ளது.

ஏரியின் நீர் மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏரியில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் அளவு விநாடிக்கு 108 கன அடியாக உள்ளது. கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. விரைவில் ஏரி நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

Chella

Next Post

நீதி வென்றது.! நாட்டையே உலுக்கிய கூட்டு பாலியல் வன்புணர்வு.! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்.!

Mon Jan 8 , 2024
2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு பல பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் விழிப்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்த 14 பேர் கலவரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய 11 குற்றவாளிகளுக்கு […]

You May Like