fbpx

தொடர் கனமழை..!! காட்டாற்று வெள்ளம்..!! சுற்றுலாப் பயணிகள் குளிக்க அதிரடி தடை..!! எங்கு தெரியுமா..?

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட 5 அருவிகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் அளவுக்கு அதிகமான தண்ணீர்கொட்டி வருகிறது.

தொடர் கனமழை காரணமாக அதிகமான தண்ணீர் மலைப் பகுதியில் உள்ள இலை தழைகள், கற்கள் உள்ளிட்டவர்களை இழுத்துக் கொண்டு அருவிகளில் கொட்டி வரும் நீருடன் சேர்த்து வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவிகளில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உங்களுக்கு இந்த பிரச்சனை எல்லாம் இருக்கா….? அப்படின்னா தயவு செஞ்சு பூண்டு மட்டும் சாப்பிடாதீங்க….!

Thu Jul 6 , 2023
நாம் அன்றாட சமையலில் கட்டாயமாக பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிகுந்தது. அதே நேரம் பூண்டை ஒரு சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை கொடுக்கும். யாரெல்லாம் பூண்டு சாப்பிடக் கூடாது என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். அன்றாட உணவில் நான் பூண்டு சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை அளவு வெகுவாக குறையலாம். ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.மேலும் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து […]

You May Like