fbpx

சிங்கப்பூரில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!! 56,000 பேருக்கு பாதிப்பு..!! லாக்டவுன் அமல்..?

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் 56,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மளமளவென அதிகரித்தது. சிங்கப்பூரில் மட்டும் டிசம்பர் மாதத்தில் தற்போது வரை சுமார் 56,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூரில் இன்று முதல் கொரோனா பாதிப்பு விவரங்கள் அன்றாடம் வெளியிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவும் வேகத்தால் அந்நாட்டில் லாக்டவுன் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரத்தில் மலேசியா அரசு உடனடியாக லாக்டவுன் அமல்படுத்தப்பட மாட்டாது. முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளது.

Chella

Next Post

இரவில் குலுங்கிய பூமி!… அதிகரிக்கும் பலி எண்ணிக்கை….! வெப்பநிலை மைனஸ் 14 டிகிரி..! அதிர்ந்த சீனா!

Tue Dec 19 , 2023
சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 111-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சீனாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் […]

You May Like