fbpx

கொரோனா தொற்று கிடுகிடுவென உயர்ந்தது..!  சீனாவில் மீண்டும் லக்டவுன்…

கொரோனா தொற்று உயர்ந்ததை அடுத்து சீனாவில் மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளது.

சீனாவில் பள்ளிகள் தேர்வு முடிந்தவுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. 12 நாளில் 2000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஃபென்யாங் மாநகரில் கொரோனா அதிகரித்ததை அடுத்து அந்நகரில் பல்வேறு பகுதிகளில் கடைகள் , மால்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. மங்கோலியா மாகாணத்திலும் புதிய பயணிகள் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கின்றது . எனவே சீனா உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

உலகில் அதிவேகமாக பரவக்குடிய கொரோனா நோய்கள் தாக்கம் இருக்கும் பகுதிகளில் சீனாவும் அடங்கியுள்ளது. எனவே அதைத் தடுக்கும்பணிகளில் சீன சுகாதாரப் பணியாளர்கள் இறங்கியுள்ளனர். மேலும் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். . யாரும் அவர்களின் மாகாணங்களை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவித்துள்ளது. 600 ,500 என கொரோனா இருந்த நிலையில்தற்போது அதிகரித்து வருவது கவலையடையச் செய்கின்றது.

Next Post

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் காலமானார்…

Mon Oct 10 , 2022
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். 82 வயதான அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஹரியானாவில் உள்ள குருகிராம் மேதாந்தா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. […]

You May Like