fbpx

தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..!! தொடர்ந்து உயரும் எண்ணிக்கை..!! மக்கள் பீதி..!!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவாரூரில் மட்டும் அதிகபட்சமாக 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளில் மிக அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கேரள மாநிலத்திலும் JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1749 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக வருகிறது. செவ்வாய்க்கிழமையான நேற்று 280 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.

Chella

Next Post

தாமாகவே முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் பொன்முடி..? பரபரப்பு தகவல்..!!

Wed Dec 20 , 2023
2006-2011ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது 39 சாட்சியங்களிடம் லஞ்ச […]

You May Like