fbpx

“ கொரோனா வைரஸ் என்பது பயோ வார்.. சில நாடுகளின் சதி…” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து..

கொரோனா வைரஸ் என்பது ஒரு பயோ வார் என்றும், சில நாடுகளின் சதி என்றும் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்..

மகாராஷ்டிராவில் ஒரு சொற்பொழிவில் உரையாற்றிய ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ” ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. மக்கள் இரண்டு வருடங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியிருந்தது. இந்த நோய் இயற்கையானது அல்ல என்று நான் அப்போது கூறியிருந்தேன். இது சில நாடுகளும், மக்களும் செய்த சதி… இது ஒரு பயோ வார் என்றும் கூறியிருந்தேன்… நான் சொன்னது உண்மை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் பெரிய நாடுகள், தடுப்பூசி பயனுள்ளதாக இல்லை என்று கூறுகின்றன. தடுப்பூசி தொற்று பரவுவதை நிறுத்தாது என கூறுகின்றனர்,” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய ரவிசங்கர் “ மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்து NAOQ19 மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு 14 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டது.. NAOQ19 கொரோனா வைரஸை குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது. NAOQ19 வெளிநாடுகளில் உள்ள பல பெரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டது, மேலும் இந்த மருந்து கொரோனா வைரஸை நிறுத்துவதில் வெற்றிகரமாக இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்தனர். செல்லுலார் சோதனைக்குப் பிறகு இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது.. பின்னர் ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்தது.. இதனால் உலகில் பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டது.. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.. லட்சக்கணக்கானோர் கொரோனா காரணமாக உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ், ஒரு உயிரியல் ஆயுதம் என்று கூறுவதற்கோ அல்லது உயிரியல் போரின் விளைவு என்று சொல்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

இந்த வைரஸ் இயற்கையானது என்றும், குறிப்பாக ஒரு விலங்கிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது.. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று கூறப்படுகிறது.. ஆனால் சீனா உஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் அமெரிக்க எரிசக்த்தித்துறை சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

வாகன ஓட்டிகளே கவனம்..!! இனி இந்த தவறை செய்தாலும் அபராதம்..!! போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

Tue Feb 28 , 2023
சாலை விதிகளை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு போக்குவரத்து போலீசார், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கனவே சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை அகற்றி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். சென்னை முழுவதும் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் […]

You May Like