fbpx

’கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது’..!! ’இது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்காதான்’..!!

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை அறிவித்து நோய்பரவலை கட்டுப்படுத்தியது. இதனிடையே இந்த கொரோனா வைரஸ் வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என உலக நாடுகள் குற்றச்சாட்டு வைத்தது. இந்நிலையில், ‘கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்’ என்ற திடுக்கிடும் தகவலை சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டார்.

’கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது’..!! ’இது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்காதான்’..!!

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் சீனாவில் அமைந்துள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமான ‘வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில்’ பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் எழுதிய ‘வுஹான் பற்றிய உண்மை’ என்ற புத்தகத்தின் சில பகுதிகள் வெளிவந்துள்ளன. அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்தது. வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி அங்கு நடத்தப்பட்டன. இத்தகைய வெளிநாட்டு ஆய்வகங்களில் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. ஒரு வகையில், இதற்கு அமெரிக்க அரசு தான் காரணம். இத்தகைய ஆபத்தான ‘உயிரி தொழில்நுட்பத்தை’ சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம். உயிரி ஆயுதம் குறித்த தொழில்நுட்பம் (பயோ வெப்பன்) சீனர்களுக்கு நாம் வழங்கியுள்ளோம்.

’கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது’..!! ’இது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்காதான்’..!!

கொரோனா வைரஸ் ‘மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது’ என்பது சீனாவுக்கு முதல் நாளிலிருந்தே தெரிந்த விஷயம். நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ‘எக்கோஹெல்த் அலையன்ஸின்’ முன்னாள் துணைத் தலைவர் ஆக விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் இருந்தார். இது தொற்று நோய்களைப் பற்றி ஆய்வு செய்கிறது. எக்கோஹெல்த் அலையன்ஸ் -வுஹான் ஆய்வகத்துடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கி உள்ளது. அமெரிக்க அரசின் ‘தேசிய சுகாதார நிறுவன’ நிதியுதவியுடன் இந்த அமைப்பு வௌவால்களில் உள்ள பல கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்து வருகிறது. மறுபுறம், சீன அரசு அதிகாரிகளும் வுஹான் ஆய்வக ஊழியர்களும் கொரோனா வைரஸ் அங்கு தோன்றியதை மறுக்கின்றனர். சமீபத்திய விசாரணையின் படி, வுஹான் ஆராய்ச்சி நிறுவனம் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

Chella

Next Post

’அந்த நபர் என்னை தவறாகத் தொட்டதால் அடித்தேன்’..!! பொன்னியின் செல்வன் பட நடிகை பகீர் தகவல்..!!

Mon Dec 5 , 2022
தன்னை தவறாக தொட்ட நபரை அடித்ததாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி, ‘மாயாநதி’ படம் மூலம் மலையாளம் தாண்டி, பிற மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தார். தமிழில் நடிகர் தனுஷூடன் ‘ஜெகமே தந்திரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லெஷ்மி, புத்தம்புது காலை, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு […]
’அந்த நபர் என்னை தவறாகத் தொட்டதால் அடித்தேன்’..!! பொன்னியின் செல்வன் பட நடிகை பகீர் தகவல்..!!

You May Like