fbpx

பருத்திவீரன் விவகாரம்..!! மனப்பூர்வமாக மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன்..!! தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!!

பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஞானவேல்ராஜா முன்வைத்து பேசினார். இந்த விவகாரத்தில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் ‘அமீர் அண்ணாவிடம்’ வருத்தம் தெரிவித்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்று தான் நான் குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி..! அன்புடன் ஞானவேல்ராஜா’ எனத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’ஜோவிகாவுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு’..!! ’அவ வெளிய வரப்போறா’..!! வனிதா விஜயகுமார் பரபரப்பு தகவல்..!!

Wed Nov 29 , 2023
நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்கச் சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர், ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அத்தோடு அந்த நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாக கூறி, தாக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதனால் […]

You May Like