fbpx

விமானம் தரையிறங்கும் போது விபத்து!! பரபரப்பு!

 மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஏரியில் விழுந்து விமானம் நொறுங்கியது.

தான்சானியாவில் ’தர் எஸ் சலாம்’ என்ற நகரில் இருந்து புகோபா நகருக்கு விமானம் புறப்பட்டது. புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க தயார் நிலையில் இருந்தபோது மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.

விமானம் கீழே விழுந்த இடம் ஒரு ஏரி என்பதால் முழு விமானமும் விக்டோரியா ஏரியில் நீரில் மூழ்கியது. உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அக்கம்பக்கத்தில் படகுகள் வைத்திருந்தவர்களும் அங்கு உதவிக்கு வந்தனர். அந்நாட்டு அரசு உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள முடுக்கிவிட்டுள்ளனர். இதையடுத்து முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த விமானத்தில் சுமார் 49 பேர் இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விக்டோரியா ஏரி ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய ஏரிகளில் முதலாவதாக உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ’ இன்ற காலை ஒரு துயரமான செய்து ஒன்று பெற்றுள்ளேன். விக்டோரியா ஏரியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்கள், உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைதி காக்க வேண்டுகின்றேன். கடவுள் நமக்கு உதவுவார்.’’ என தெரிவித்திருந்தார்.  

Next Post

BB Tamil..!! அடுத்த சில்மிஷ சர்ச்சையில் சிக்கிய மற்றொரு போட்டியாளர்..!! இருட்டில் நடந்த பரபர சம்பவம்..!!

Sun Nov 6 , 2022
அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின், பெண்களிடம் எல்லை மீறும் மற்றொரு போட்டியாளர் குறித்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நபராக வந்த ஜிபி முத்து, முதல் நபராகவே வெளியேறிவிட்டார். அதன்பிறகு, சாந்தி மற்றும் அசல் கோலார் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். […]
BB Tamil..!! இலட்சத்தை அள்ளிச்சென்ற நிவாஷினி..!! 42 நாட்களுக்கு சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

You May Like