fbpx

உலகக்கோப்பை கிரிக்கெட்..!! இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி திடீர் மாற்றம்..? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையும் கடந்த மாதம் வெளியானது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்.15ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. ஆனால், நவராத்திரி தொடக்க விழா காரணமாக ஒருநாள் முன்னதாக போட்டியை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தன.

இந்நிலையில், நேற்று உலக கோப்பை தொடர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஜெய்ஷா கூறுகையில், உலகக் கோப்பை போட்டி தேதிகளை மாற்ற சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அட்டவணையில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும். அதுவும் தேதியில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படுமே தவிர, போட்டி நடக்கும் மைதானங்களில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை” என்றார்.

மேலும், ”பும்ரா தற்போது உடல் தகுதியுடன் இருப்பதால் அயர்லாந்துக்கு எதிரான டி20 விளையாட வாய்ப்பு உள்ளது. உலகக் கோப்பை தொடரின் போது ரசிகர்களுக்கு இலவச குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உலகக் கோப்பை டிக்கெட்டுகள் குறித்த அறிவிப்பு விரைவில் பிசிசிஐ மற்றும் ஐசிசியால் கூட்டாக வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை..? மாநிலங்களவையில் அதிரடி..!!

Sat Jul 29 , 2023
மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மருந்துகள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தியுள்ளார். இ-பார்மஸி மூலமாக ஆன்லைனில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதை நெறிமுறைப்படுத்த தற்போது வழிவகை இல்லாததால், இது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினார். சிறப்பு கவன ஈர்ப்பின் மூலம் மத்திய அரசின் கவனத்தை […]

You May Like