fbpx

புற்றுநோய், ஆஸ்துமா, சுவாச நோய்கள் நீங்க!… மாவிலை ஜூஸின் அற்புத மருத்துவ குணங்கள்!…

பல அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளடக்கியுள்ள மாவிலையில் தயாரிக்கப்படும் ஜூஸில் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

கோடை காலம் தொடங்கிவிட்டாலே மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். ஆங்காங்கே சாலையோரங்களில் மாம்பழங்கள் விற்பனை நடைபெறும். ஜூசி மாம்பழங்கள் எவ்வளவு சுவையானவையோ அதே அளவு நன்மை பயக்கும். அந்தவகையில் மாம்பழம் மட்டுமல்ல ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட அதன் இலைகளும் பல்வேறு நன்மை பயக்கும். மாவிலையில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் காணப்படுகின்றன. மா இலைகளை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை விரட்டலாம்.

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அதை கேஸ் அடுப்பில் வைக்கவும், பிறகு அதில் 2 முதல் 4 மா இலைகளை போடவும். தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விடவும். பின் அதனை வடிகட்டி ஆறவைத்து அதனுடன் தேன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். மேலும், மாவிலைகள் வயிற்றுப் புண்களுக்கான சிகிச்சையில் ஒரு சஞ்சீவியாக விளங்கும். இது வயிற்றுப் புண்களின் சிகிச்சையில் பெரிதும் உதவுகிறது. இரத்த அழுத்தம்- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மா இலைகளின் நீரை உட்கொள்ளலாம். இரத்த நாளங்களை வலுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோய்- சர்க்கரை நோயாளிகள் மா இலைகளை வேகவைத்து அருந்துவது மிகுந்த நிவாரணம் தரும். அவற்றில் அந்தோசயனிடின் என்ற டானின் உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

மாவிலைகளை வேகவைத்து குடிப்பது ஆஸ்துமா அல்லது சுவாச நோய்களிலும் நன்மை பயக்கும். இது இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சனையில் நிவாரணம் அளிக்கும். மா இலையை கஷாயம் செய்து குடிப்பது நன்மை பயக்கும். மா இலைகளில் புற்று நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மூல காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். கூந்தலுக்கு நன்மை பயக்கும் – மா இலைகள் முடி பிரச்சனைகளை குணப்படுத்தும். இந்த இலைகளில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்க உதவும். மேலும், அவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

Kokila

Next Post

பயணிகளுடன் மாயமான ரயில்!... 100 ஆண்டுகள் ஆகியும் துப்புகிடைக்காத மர்மம்!... நடந்தது என்ன?

Wed Mar 15 , 2023
இத்தாலியில் பயணிகளுடன் மாயமான ரயில் 100 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித துப்பும்கிடைக்காத மர்மமாகவே நீடித்துவருகிறது. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மர்மங்களைப் புரிந்துகொள்ள மனிதர்கள் மத்தியில் எப்போதும் ஆர்வம் இருக்கும். பெர்முடா முக்கோணம், டார்க் மேட்டர் மற்றும் ஜாக் தி ரிப்பர் முதல் 1518 ஆம் ஆண்டின் நடனம் பிளேக் வரை பல மர்மங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்களை குழப்பி வருகின்றன. இந்த பட்டியலில் சேரும் மற்றொரு மர்மம், […]

You May Like