fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு..! விரைவில் சம்பளம் உயரப்போகிறது.. எவ்வளவு தெரியுமா..?

2025 ஆம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் மத்திய ஊழியர்களுக்கு மற்றொரு பெரிய நல்ல செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 2024 வரையிலான AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில், அகவிலைப்படி 56% வரை உயரலாம். அதாவது, ஒட்டுமொத்தமாக இது 3% உயர்வு இருக்கும். இருப்பினும், நவம்பர் மற்றும் டிசம்பர் 2024க்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் புதிய அகவிலைப்படி ஜனவரி 1, 2025 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி எப்படி முடிவு செய்யப்படுகிறது?

AICPI (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் குறியீடு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு, சராசரியாக 6 மாதங்களின் (ஜூலை-டிசம்பர்) அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.

செப்டம்பர் 2024: 143.3 புள்ளிகள்
அக்டோபர் 2024: 144.5 புள்ளிகள்

இந்த புள்ளிவிவரங்களின்படி, அகவிலைப்படி 55% ஐத் தாண்டியுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இதில் நவம்பர் மாத புள்ளிகள் டிசம்பர் 31க்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும், ஆனால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இனி டிசம்பர் எண்கள் ஜனவரி 31க்குள் வரும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான ஒன்றாக வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளத்தில் 56% அகவிலைப்படி விளைவு என்னவாக இருக்கும்?

ஒவ்வொரு 1% அகவிலைப்படி அதிகரிப்பும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எடுத்துக்காட்டு:

அடிப்படை ஊதியம்: ரூ.18,000
53% அகவிலைப்படி: ரூ.9,540
56% அகவிலைப்படி: ரூ.10,080
பலன்: மாதம் ரூ.540

அடிப்படை ஊதியம்: ரூ.56,100
53% அகவிலைப்படி: ரூ.29,733
56% அகவிலைப்படி: ரூ.31,416
பலன்: மாதம் ரூ.1,683

அகவிலைப்படியின் பலன் என்ன?

பணவீக்கத்தை எதிர்கொள்வதில் நிவாரணம்: அகவிலைப்படி, அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பணவீக்கத்தை ஈடுசெய்கிறது.

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் முன்னேற்றம்: இது ஊழியர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு பலன்: ஓய்வூதியத்தில் டிஏவை அமல்படுத்துவது வயதான காலத்திலும் உதவுகிறது.

அரசு கருவூலத்தில் சுமை: அகவிலைப்படி உயர்வு, அரசு கருவூலத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

புதிய அகவிலைப்படி ஜனவரி 1, 2025 முதல் அமல்படுத்தப்படும்

அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு, இது ஜனவரி 1, 2025 முதல் செயல்படுத்தப்படும். இருப்பினும், இது மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். பொதுவாக ஹோலி பண்டிகையை ஒட்டி அரசு இந்த அறிவிப்பை வெளியிடும். தற்போது, ​​2024 ஜூலை 1 முதல் அகவிலைப்படி 53 சதவீதம் வழங்கப்படுகிறது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, நிதி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிடும்.

Read More : சூப்பர்..! உங்களிடம் 5 ஏக்கர் குறைவாக நிலம் இருந்தால் ரூ.15,000 பெறலாம்…! எப்படி தெரியுமா…?

English Summary

There is a possibility of an increase in the Dearness Allowance (DA) of central government employees.

Rupa

Next Post

இண்டர்போல் அமைப்புடன் இணைந்து செயல்படும் பாரத்போல்.. இதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

Tue Jan 7 , 2025
BHARATPOL portal: India's mega game changer plan to curb global crimes

You May Like