fbpx

அடடே..!! ஒற்றை தலைவலி கூட உடனே பறந்துபோய்விடும்..!! கற்பூர வாசனையை சுவாசிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

பொதுவாகவே, கற்பூரம் கடவுள் வழிபாட்டில் தான் பயன்படுத்தப்படும். கற்பூரத்தை எரிக்கும் போது அதிலிருந்து ஒரு நல்ல வாசனை வரும். ஆனால், கற்பூரத்தை வழிபாட்டில் பயன்படுத்துவதை தவிர, பல வகையான உடல்நலக் கோளாறுகள் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம், எப்படியெனில் கற்பூரத்தில் இருந்து வரும் வாசனை பல உடல்நல பிரச்சனைகளை நீக்க உதவுமாம். தினமும் கற்பூர வாசனையை சுவாசித்தால் மன அழுத்தம் குறையும், பதட்டம் நீங்கும். காரணம் இதில் இருந்து வரும் வாசனை உங்கள் மனதை அமைதியாக்குகிறது. இதனால் உங்களை அறியாமலேயே உங்கள் முகத்தில் ஒரு புன்னகை வரும்.

அதுமட்டுமின்றி, கற்பூர வாசனையை சுவாசித்தால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் குறையுமாம். தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் உடனே நிவாரணம் கிடைக்க வேண்மென்றால், கற்பூர வாசனையை சுவாசித்தால் போதுமாம். அதேபோல, கற்பூரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை கிருமிகளை விலக்கி வைக்கிறது.

எனவே, வீட்டை சுத்தம் செய்யும் போது கற்பூர பொடியை பயன்படுத்துங்கள். பாக்டீரியா வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும், வீட்டில் துர்நாற்றம் வீசாது. மேலும், கற்பூரத்தை பொடியாக்கி, அதை எண்ணெயில் கலந்து உடலில் தடவினால் வலி மற்றும் அரிப்பு குறையும். அதுமட்டுமின்றி, தசைகள் மற்றும் மூட்டுகளில் உள்ள வலியையும் குறைக்கும். இருப்பினும், உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனைகள் இருந்தால் இவ்வாறு முயற்சிக்க வேண்டாம்.

Read More : ஏப்ரல் 16ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Chella

Next Post

’உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்’..? ’மகளிருக்கு வழங்கும் ரூ.1,000 இப்படித்தான் தர்றாங்க’..!! சீமான் புது விளக்கம்..!!

Sat Apr 13 , 2024
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து சீமான் புது விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, […]

You May Like