fbpx

அடடே சூப்பர்..! செமஸ்டர் தேர்வில் இது கட்டாயமாம்..! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால், சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அடடே சூப்பர்..! செமஸ்டர் தேர்வில் இது கட்டாயமாம்..! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

அதில், ”சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் அதற்காக தமிழ் பாடத்திட்டங்களை சரிவர பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்து முறைப்படுத்தி தமிழ் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வெளியான தகவலை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சினிமாவை விட்டு விலகுகிறார் நயன்தாரா..? இந்த ஒரு காரணத்திற்காக மட்டும்தானாம்..!

Thu Sep 1 , 2022
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைத்துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ”ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அவர் தெலுங்கு, மலையாளம் என தன் நடிப்பால் நம்பர் ஒன் நடிகையாகி லேடி […]
சினிமாவை விட்டு விலகுகிறார் நயன்தாரா..? இந்த ஒரு காரணத்திற்காக மட்டும்தானாம்..!

You May Like