தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளில் சேருவதற்கு டான்செட், சீட்டா ஆகிய பொது நுழைவுத் தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம்.
வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு மார்ச் மாதம் நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நேற்று முடியவிருந்த நிலையில், வரும் 12ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.