fbpx

’அன்பே.. சொர்க்கத்தில் சந்திப்போம்’..! காதலியை கொன்று வீடியோ வெளியீடு..!! ரிசார்ட்டில் நடந்த பயங்கரம்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஷில்பா (25). இவரின் தோழன் அபிஜித் படிதார். அபிஜித், ஷில்பாவை ஜபல்பூரின் புறநகர் பகுதியில் இருக்கும் ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அறையில் தங்கி இருந்த போது அபிஜித், ஷில்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். முதலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

’அன்பே.. சொர்க்கத்தில் சந்திப்போம்’..! காதலியை கொன்று வீடியோ வெளியீடு..!! ரிசார்ட்டில் நடந்த பயங்கரம்..!!

அதில் அபிஜித், ’துரோகம் செய்யாதே’ என்று பேசுகிறார். பின்னர் அருகில் கிடந்த போர்வை ஒன்றை விலக்குகிறார். உள்ளே ஷில்பா கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இரண்டாவது வீடியோவில் தான் பாட்னாவை சேர்ந்த வியாபாரி அபிஜித் என்றும், கொலை செய்யப்பட்டு கிடக்கும் ஷில்பா எனது தொழில் பார்ட்னர் ஜிதேந்திர குமாருடன் தொடர்பு வைத்திருந்தார். ஷில்பா ஜிதேந்திர குமாரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு ஜபல்பூருக்கு ஓடிவிட்டார். ஜிதேந்திர குமார் கேட்டுக் கொண்டதால் நான் ஷில்பாவை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

’அன்பே.. சொர்க்கத்தில் சந்திப்போம்’..! காதலியை கொன்று வீடியோ வெளியீடு..!! ரிசார்ட்டில் நடந்த பயங்கரம்..!!

மூன்றாவது வீடியோவில், ’அன்பே, நாம் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜிதேந்திராவின் உதவியாளர் சுமித் பட்டேல் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஷில்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி ஜிதேந்திராவும், சுமித் பட்டேலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்த அபிஜித் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத்திற்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”ரிசார்ட்டில் அபிஜித்தான் அறை எடுத்து தங்கி இருக்கிறான். இரவில் கூட தனியாகவே இருந்தான். காலையில் ஷில்பா வந்து அபிஜித்தை பார்த்தார். இருவரும் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஒரு மணி நேரம் கழித்து அபிஜித் மட்டும் தனியாக சென்றுவிட்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

#திருவள்ளூர் : 2 வயது மகன் வெந்நீரில் விழுந்து உயிர் பரிபோன சோகம்.!

Wed Nov 16 , 2022
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக் (28), என்கிற கூலித்தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) வாழ்ந்த வந்துள்ளார். சென்ற 10ம் தேதி அன்று , ஜெரினா மகனை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் போட்டு அதனை பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்துள்ளார்.  இந்த நிலையில், அதனருகில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. சோப்பு மற்றும் துண்டை எடுக்க வீட்டிற்குள் ஜெரினா சென்றுள்ளார். […]

You May Like