fbpx

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த விஜய் டிவி புகழின் மகள்.. எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் பிரபல காமெடி நடிகரான
புகழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டார். அதை அடுத்து அது இது எது உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பெண் வேடுமிட்டு தனது திறமையை வெளிக்காட்டினார் அது மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை கொண்டு போய் சேர்த்தது.

குறிப்பாக பெண் வேடத்தில் அவர் செய்யும் கலாட்டாக்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையே சிரிப்பொலியால் ஆழ்த்தியது. மேலும் சிரிப்புடா எனும் நிகழ்ச்சியில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். அவர் பெண் வீடு நடித்த போது அவரின் நளினமான உடல் அழகு மொழிகளும் நகைச்சுவை தரும் உணர்ச்சிகளும் பலரையும் கவர்ந்து ஈர்த்தது. இதனாலே அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

மேலும் விஜய் டிவியில் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அவர் தனது திறமையை வெளிப்படுத்தி சமையல் நகைச்சுவை கலாட்டா என அனைத்தும் கலந்த கலவையாக பெரும் புகழ்பெற்றார். இதனிடையே தனது நீண்ட நாள் காதலி ஆன பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது புகழ் தனது மகளின் பிறந்தநாளை அண்மையில் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் புகழின் மகள் ரித்தன்யா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அதுவும் அதிக நேரம் Dumbbellஐ தூக்கிய குழந்தை என்ற சாதனை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

11 மாதங்கள் 16 நாட்களே ஆன ரிதன்யா, 2 கிலோ எடையுள்ள டம்ப்பெல்லை இடைவிடாமல் 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்று கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் புகழுக்கும் அவரின் மகள் ரித்தயாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read more ; Viral Video | “இந்த வாட்டி மிஸ்ஸே ஆகாது”..!! முன்கூட்டியே பாலத்தில் பார்க்கிங்கை போட்ட சென்னை வாசிகள்..!!

English Summary

daughter of Vijay TV pugazh, who was placed in the Guinness Book of Records.. Do you know why?

Next Post

திருந்தவே மாட்டிங்களா? கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை..!! அதிரடி காட்டிய போலீஸ்..

Mon Oct 14 , 2024
While the incident of death due to drinking liquor in Kallakurichi shook Tamil Nadu, the sale of liquor again has caused a shock.

You May Like