fbpx

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களே!… IMPS சேவை மாற்றம் யாருக்கெல்லாம் பொருந்தும்!

IMPS: நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிதி சார்ந்த விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஐஎம்பிஎஸ் சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ரூ.15 வரை கட்டணம் செலுத்த வேண்டும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த மாற்றம் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன.

இன்றுமுதல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, மே 1ஆம் தேதிக்கு பிறகு ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.1000-க்கும் கீழ் பணம் அனுப்பினால் ரூ.2.5 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல ரூ.1000 முதல் ரூ.25000 வரையில் அனுப்பினால் ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும், ரூ.25000 முதல் ரூ.5 லட்சம் வரையில் பணம் அனுப்பினால், ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும். டெபிட் கார்டு வருடாந்திர கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் அதுவே கிராமப்புறங்களில் ரூ.90ஆக எடுத்து கொள்ளப்படும். இந்த விதிகள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Readmore: அதிரடி..! மலைப் பகுதியில் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை…!

Kokila

Next Post

Covishield: கொரோனாவை தடுக்க போடப்பட்ட தடுப்பூசியால் பக்க விளைவுகள்..!! நீதிமன்றத்தில் நிறுவனம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Wed May 1 , 2024
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. Covishield: முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கின. இந்த […]

You May Like