fbpx

நாட்டையே உலுக்கிய டெல்லி இளம்பெண் விபத்து!!! உடனிருந்த தோழி வெளியிட்ட பகீர் தகவல்…

டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் அஞ்சலி(20) என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்த 5 போரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த அஞ்சலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பிய நிலையில், இன்று வெளியான பிரேதபரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, பல கிலோமீட்டர் இழுத்து செல்லப்பட்டதாலேயே இளம்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலும் விபத்துக்குள்ளான அஞ்சலியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

அந்த விபத்தின் போது அஞ்சலி மட்டுமில்லாமல் அவரது தோழியும் உடனிருந்தது சிசிடிவி கட்சி மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிதியிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “எனக்கு அவளை 15 நாட்களாக தான் தெரியும், ஆனால் நாங்கள் மிக விரைவில் நண்பர்களாகிவிட்டோம். நாங்கள் ஒன்றாக புத்தாண்டைக் கொண்டாட முடிவு செய்தோம். அதனால் டிசம்பர் 31 அன்று, அவள் என்னை அழைத்துச் செல்ல சுல்தான்புரிக்கு வந்தாள். நாங்கள் இருவரும் சேர்ந்து ரோஹிணிக்கு சென்றோம், அதன்பிறகு வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அதைத்தொடர்ந்து நாங்கள் ஹோட்டலுக்கு சென்றோம்.

பிறகு 2 மணியளவில் நானும் அஞ்சலியும் ஹோட்டலை விட்டு வெளியேறினோம். அஞ்சலி கோபமாக இருந்தால், அப்போது நொடி பொழுதில் லாரி விபத்திலிருந்து தப்பித்தோம். அதன்பிறகு அஞ்சலியின் காதலன் அவளை சந்திக்கவில்லை என்றால் இறந்துவிடுவேன் என்று என்னிடம் கூறினாள், நான் வண்டியை நிறுத்துமாறு சொன்னேன். அதன்பிறகு அஞ்சலி வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று விபத்து நடந்து விட்டது.

விபத்துக்குள்ளானதும் “அவள் கத்திக் கொண்டிருந்தாள். காரில் இருந்த ஆண்களுக்கு அவள் அலறல் சத்தம் கேட்டது, ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை. அவர்கள் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினர். காரில் இருந்தவர்கள் சத்தம் கேட்ட உடனே காரை நிறுத்தியிருந்தால் அஞ்சலியை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் அவர்கள் அதை செய்யாமல் தொடர்ந்து காரை ஓட்டி சென்றதால் அஞ்சலி காருடன் இழுத்து செல்லப்பட்டாள்” என்று நிதி தெரிவித்தார்.

இது குறித்து ஏன் காவல்துறையிடம் சொல்லவில்லை என்று கேட்டதற்கு, பயந்துவிட்டதாகவும், நடந்தே வீட்டுக்குத் திரும்பியதாகவும், அப்போது வீட்டிற்கு செல்வது மட்டுமே மனதி இருந்ததாக நிதி தெரிவித்தார்.

Kathir

Next Post

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் பத்து தல டப்பிங் பணி நிறைவு : கதாநாயகி பிரியா பவானி ஷங்கர் டிவீட்....!

Tue Jan 3 , 2023
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தை நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த […]

You May Like