fbpx

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு..!! அதுவும் இந்த மாவட்டங்களிலும் ரொம்ப அதிகமாம்..!! அமைச்சர் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவல் என்பது அதிகரித்து மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி வருகிறது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை சென்னையில் தொடங்கி வைத்தார். அதில், உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தாண்டு தமிழகம் முழுவதும் 6,565 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருநெல்வேலி, திருப்பத்தூர், தேனி மற்றும் மதுரை பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More : ‘அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்லாததால் நடிகையை படத்தில் இருந்து தூக்கிய நகுல்’..!! உதவி இயக்குனர் பகீர் தகவல்..!!

English Summary

For the past few days in Tamil Nadu, the spread of dengue has been increasing in various districts and creating panic among the people.

Chella

Next Post

விபத்தில் பறிபோன காதலனின் உயிர்..!! கோஸ்ட் வெட்டிங் முறையில் கரம்பிடிக்கும் காதலி..!! நெகிழ்ச்சி சம்பவம்..!!

Sat Jul 27 , 2024
The incident where his girlfriend decided to marry her boyfriend who died in a car accident in Taiwan in a ghost wedding has caused a stir.

You May Like