fbpx

அரசு வேலையில் சேர ஆசை..!! ஆனால் கழுதை பால் மூலம் மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் நபர்..!!

கழுதை பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர் ஒருவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திர்ரன் சோலங்கி. இவர், தன்னுடைய கிராமத்தில் கழுதை பண்ணை வைத்துள்ளார். இதில், 42 கழுதைகள் உள்ளன. கழுதை பாலின் விலை லிட்டருக்கு ரூ.7,000 வரை விற்பனையாகிறது. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார். இதுகுறித்து சோலங்கி கூறுகையில், “நான் அரசு வேலையில் சேர நினைத்தேன். ஆனால், எனக்கு தனியார் நிறுவனத்தில் தான் வேலை கிடைத்தது. அந்த சம்பளம் என்னுடைய குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.

அப்போது தான் நான் கழுதை வளர்ப்பு பற்றி கேள்விப்பட்டு, அதற்காக ரூ.22 லட்சம் முதலீட்டில் 20 கழுதைகளுடன் ஒரு பண்ணையை தொடங்கினேன். இப்போது, என்னுடைய பண்ணையில் 42 கழுதைகள் உள்ளன. குஜராத்தில் கழுதை பாலுக்கான தேவை இல்லாததால் முதல் 5 மாதங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. பின்னர், தென்னிந்தியாவில் கழுதை பாலுக்கு தேவை அதிகமாக இருப்பதை அறிந்து கொண்டு அங்குள்ள நிறுவனங்களை அணுகி ஆர்டர் பெற்றேன்.

தற்போது, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சில அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கழுதை பாலை அனுப்பி வருகிறேன். பாலை பிரீஸர்களில் வைத்து பாதுகாக்கலாம். இதனை, உலர வைத்து தூள் வடிவிலும் விற்பனை செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : சென்னை மக்களே..!! இனி வாகனம் பார்க்கிங் செய்வதில் பெரும் சிக்கல்..!! அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு..!!

Chella

Next Post

கொளுத்தும் வெயில்..!! ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் உடனே இதை பண்ணுங்க..!! இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து..!!

Tue Apr 23 , 2024
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் வெயில் காரணமாக பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதில் ஒன்று தான் ஹீட் ஸ்ட்ரோக். மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் பட்சத்தில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. பொதுவாக மனிதர்களின் உடல்நிலை 98.6 டிகிரி […]

You May Like