fbpx

”கல்யாணம் ஆனாலும் அவன மறக்க முடியல”..!! கணவனின் கழுத்தை அறுத்துவிட்டு Ex உடன் ஓடிய இளம்பெண்..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலிய தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நாமக்கல் மாவட்டம் சிக்கல் ஊரைச் சேர்ந்த நந்தினி (25) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தான் இவர்களின் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அன்று சரவணனை நந்தினியும் அவரது கள்ளக்காதலன் ராஜசேகரன் ஆகிய இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டு கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சரவணன், குத்தாலம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நந்தினி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருமணத்திற்கு முன்பு ராஜசேகரனுடன் தனக்கு பழக்கம் இருந்தது. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சரவணனை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரை என்னால் மறக்க முடியவில்லை. அதனால் இருவரும் தொடர்பில் இருந்தோம். இதை அறிந்த தனது சரவணன் என்னை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்து இருவரும் சேர்ந்து கணவனை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றோம் என்று போலீசிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார் நந்தினி. இதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை நைசாக பேசி அழைத்து வந்து அரிவாள் வெட்டு..!! கணவன் வெறிச்செயல்..!!

Fri Mar 31 , 2023
திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் கென்னடி தெருவில் முகமதுபாபு என்ற கண்ணன் (40), சமீமாபேகம் (34) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் கணவனின் கொடுமையை தாங்கமுடியாத சமீமாபேகம், கணவரைவிட்டு பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். முகமதுபாபு அவ்வப்போது, அவர்கள் வீட்டிற்கு சென்று, நமது வீட்டிற்கு வந்துவிடுமாறு அழைப்பு […]

You May Like