செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பாலம்மாள் நகர் பகுதியில் சேர்ந்த படூர் பாலு என்ற மர வியாபாரி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதோடு அவர்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் 20 பேர் நீக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் காவல் துறையினர் குற்றம் சுமத்தப்பட்ட பாலு உள்ளிட்டவர்களை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
ஆகவே இவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், மாவட்ட நீதி துறை நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதோடு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக செங்கல்பட்டு பகுதியில் க.புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் மனுவும் வழங்கப்பட்டது.