fbpx

’உலகக் கோப்பையை ஓரியோவுடன் ஒப்பிட்ட தோனி’..!! இதுக்குதான் இந்த பில்டப்பா? நெட்டிசன்கள் தாக்கு..!!

சிஎஸ்கே கேப்டன் தோனி, இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். தோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். ஒரு சிலர், ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி விலக போவதாக பதிவிட்டனர். மேலும், தோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியானது.

’உலகக் கோப்பையை ஓரியோவுடன் ஒப்பிட்ட தோனி’..!! இதுக்குதான் இந்த பில்டப்பா? நெட்டிசன்கள் தாக்கு..!!

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் சிலர் கணித்து வைத்திருந்தனர். ஆனால், இந்த யூகங்களுக்கு எல்லாம் மாறாக, பேஸ்புக் நேரலையில் அவர் அறிவித்த விஷயம், இதெல்லாம் ஒரு விஷயமா? என்று ரசிகர்களை பேச வைத்தது. சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தோனி, ”ஓரியோ (Oreo) பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்துச் சென்றார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவில் தோனி மீண்டும் ஓரியோவை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்ட் முன்னதாக 2011இல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றது.

’உலகக் கோப்பையை ஓரியோவுடன் ஒப்பிட்ட தோனி’..!! இதுக்குதான் இந்த பில்டப்பா? நெட்டிசன்கள் தாக்கு..!!

இன்றைய பிராண்ட் விளம்பரத்தில், முந்தைய வெளியீடு மற்றும் உலகக் கோப்பை வெற்றியை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டார் தோனி. இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார். இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும், தனது பிராண்ட் விளம்பரத்திற்காக, தன்னை பின்தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்களை பயன்படுத்தியிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Chella

Next Post

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி..!! அதிரடியாக இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள்..!!

Sun Sep 25 , 2022
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்ற நாள் முதல் அந்த துறையில் புது புது மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இடம் மாறுதல்கள் அனைத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை இணை […]

You May Like