fbpx

உங்களுக்கு உற்சாகமான செய்தி நாளை சொல்லப்போகின்றேன்…. தோனி வைக்கும் சஸ்பென்ஸ் எதற்காக ? …

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி நாளை ஒரு உற்சாகமான செய்தி அறிவிக்கப்போவதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி உற்சாகமான செய்தி ஒன்றை நாளை பகிர்ந்துகொள்ள உள்ளதாக கூறியுள்ளார். நாளை மதியம் 2 மணி அளவில் இந்த தகவலை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.இதனால் ரசிர்கள் எதற்காக இந்த சஸ்பென்ஸ் என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது ஐ.பிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் நாளை 2 மணி அளவில் உற்சாகமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நான் பங்கேற்கும் அந்த லைவ் நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்பீர்கள் என நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐ.பி.எல். தொடரில் மற்றுமே தோனியை பார்க்க முடிகின்றது என ரசிர்கள் ஏக்கத்தோடு உள்ளனர். இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Post

சிறுவர்களின் போர்ன் வீடியோக்களை பதிவேற்றுபவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை ...

Sat Sep 24 , 2022
சிறுமிகளின் ஆபாச படங்கள், போர்ன் வீடியோக்களை டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பதிவிட்டவர்களை பிடிக்க 20 மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்தியாவில் 18 வயதிற்குள்பட்ட சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. குழந்தைகள் எனவும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. சிறுமிகளுக்கு எதிராக சமூக வலைத்தலங்களில் வீடியோக்கள் பதிவிடுவது, போலியான அக்கவுண்டை பயன்படுத்தி அதில் பெண்களின் ஆபாச […]

You May Like