fbpx

’என் கண்ணு முன்னாடியே நீ இதெல்லாம் பண்றியா’..? பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவியை வெட்டி சாய்த்த கணவன்..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா (35). பெயிண்டரான இவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள காலணி தைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த சனாப் (24) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாக சனாப், கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இருப்பினும் சில மாதங்களாக கணவன்-மனைவி இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தனர். ஆனால், கடந்த 10 நாட்களாக கணவரிடம் பேச சனாப் மறுத்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரஹமத்துல்லா, மனைவிக்கு தெரியாமல் அவரை பின்தொடர ஆரம்பித்தார். அப்போது சனாப்புக்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருடன் அவர் பைக்கில் நெருக்கமாக அமர்ந்து செல்வதை பார்த்து ரஹமத்துல்லா அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி மனைவி வேலை பார்க்கும் கம்பெனிக்கு சென்று அவரிடம் தட்டிக்கேட்டார். மேலும் ரஹ்மத்துல்லா, “நான் ஊருக்கு செல்கிறேன். நான் திரும்ப வருவதும், வராததும் உன் கையில் இருக்கிறது” என்றார். அதற்கு சனாப், “நீ இங்கே வரவேண்டாம். ஊரிலேயே தங்கி விடு” என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஹமத்துல்லா, இடுப்பில் மறைத்து வைத்து இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி சனாப்பை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தார்.

இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சனாப்பை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சனாப், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் 25 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹ்மத்துல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

அயோத்தி குழந்தை ராமர் சிலை ஊர்வலம் திடீர் ரத்து!… ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவிப்பு!

Tue Jan 9 , 2024
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, அயோத்தி ரயில் நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு விழா, வரும் 22-ம் தேதி […]

You May Like