fbpx

Shampoo இந்தியாவின் ஐடியா என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகில் மற்ற நாடுகளுக்கு பெரிதும் ஒரு எடுத்துக்காட்டான நாடாக இந்தியா இருந்து வருகிறது . மத நல்லிகணக்கனம். மொழி நல்லிணக்கனம் என பல சார்பு மக்கள் இருந்தாலும் சகோதரத்துவம் காக்கும் நாடாக இருந்து வருகிறது. அப்படிபட்ட இந்தியா குறித்து பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்கள். உலக அளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்களை கடவுளாக போற்றகூடிய தீவிர ரசிகர்கள் இந்தியாவில் உள்ளனர். அப்படிபட்ட இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் அல்ல கிரிக்கெட் மைதானம் கூட நம்மை ஆச்சரியப்படுத்தும் . ஆமாங்க உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் தான் உள்ளது. Chail cricket ground , chail , Himachal Pradesh அங்கு தான் உள்ளது இந்த மைதானம் 1893ம் ஆண்டு உருவாக்கபட்டது . தரைமட்டத்தில் இருந்து 2444 அடி உயரத்தில் உள்ளது.

Shampoo என்பதனை அறிமுகப்படுத்தியது இந்தியா தான். ஆனால் அதனை கம்ர்சியல் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கபட்ட திரவமாக அறிமுகப்படுத்தினார்கள். Shampoo என்ற சொல்லே சமஸ்கிருத வார்த்தையான champu என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது. அதற்கு அர்த்தம் massage என்று ஆகும்.

இந்தியா பலவித மக்கள் வாழும் நாடு ஆகும். Spiritual காரணங்கள் மற்றும் அவரவர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இந்தியாவில் மாமிசம் சாப்பிடாமல் vegetarian சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை 20-40 சதவீதமாக உள்ளது. அதன் காரணமாக உலக அளவில் இந்தியாவை largest vegetarian friendly country ஆக திகழசெய்கிறது.

பலருக்கு தெரியாத ஆச்சரிய தகவல் ஒன்று இந்தியா தான் உலகிலேயே முதன் முதலாக சர்க்கரை உற்பத்தியை கண்டுபிடித்த நாடாகும். சர்க்கரையை எப்படி சேகரிக்க வேண்டும். எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தான் கண்டுபிடித்தது. அதன் பின் வெளி நாடுகளில் இருந்து வந்த பலர் இந்தியாவில் இருந்து கற்றுகொண்டு சென்றனர்.

உலகின் மனித கால்குலேட்டர் என முதன் முதலில் பட்டம் பெற்றவர் சகுந்தலா தேவி ஆவார். அவர் முதன் முதலாக இரண்டு 13 digit நம்பரை multiply செய்து சரியாக பதில் அளித்தார் அதன் காரணமாக அவர் அந்த பெயர் பெற்றார். அதுவும் ரேண்டமாக 13 நம்பர்களை தேர்வு செய்து அவரை calculate செய்தார். அவருக்கு அதற்கான விடை கண்டுபிடிக்க 28 நொடிகளே ஆயின.

உலக அளவில் வைரத்திற்கு எப்போதுமே பெரிய மதிப்பு உண்டு . அப்படிபட்ட வைரம் முதன் முதலில் இந்தியாவில் தான் mine செய்யப்பட்டது. பின்னர் தான் பிரேசிலில் வைரம் கண்டுபிடிக்கபட்டது. உலக வைரம் உற்பத்தியை தொடங்கியது இந்தியா தான். உலக அளவில் ஆங்கிலம் மொழி அதிக மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது. உலக அளவில் 125 million மக்கள் ஆங்கிலம் பேசி வருகின்றனர். அதில் 10% மக்கள் இந்தியாவில் உள்ளனர். அதன் காரணமாக இந்தியா உலக அளவில் ஆங்கிலம் பேசுபவர்கள் எண்ணிக்கையில் 2ம் இடத்தில் உள்ளது.

அனைத்து நாடு விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறி கொண்டு தான் உள்ளன. பல நாடுகள் போட்டிக் போட்டுக் கொண்டு இருக்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியில் பல நாடுகள் நிலா குறித்த ஆராய்ச்சியில் அதிகமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அப்படியாக இந்தியா சார்பாக 2009ம் ஆண்டு Chandrayan அனுப்பபட்டது . அதன் மூலம் நிலாவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்த முதல் நாடு இந்தியா தான்.

Kokila

Next Post

பூமிக்கடியில் கேட்கும் மர்ம சத்தம்!... பதறிய மக்கள்!

Wed Oct 18 , 2023
இலங்கை நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து நீர் செல்வது போன்ற பல்வேறு விதமான அமானுஷ்யமான மர்ம சத்தம் கேட்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த கிராமமானது மலைகள் அற்ற ஒரு சமவெளிப் பகுதியில் கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்த நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அங்கு நிலத்துக்கு கீழ் இருந்து பல்வேறு சத்தங்கள் கேட்பதாக தொடர்ச்சியாக புகார்கள் கிடைக்கப் பெற்றதாகவும், […]

You May Like