fbpx

கள்ள உறவுக்கு இடையூறு..!! கணவனுக்கு விஷ ஊசி..!! 33 நாட்கள் கோமாவுக்கு அனுப்பி கொன்ற மனைவி..!!

கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, விஷ ஊசி போட்டு கொலை செய்த பெண் டாக்டர் மற்றும் கள்ளக்காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் சதீஷ் கேசவரா தேஷ்முக், தனது மனைவி, மகனுடன் வசித்து வந்துள்ளார். தேஷ்முக் மற்றும் அவரது மனைவி இருவருமே மருத்துவர்கள்தான். இந்நிலையில், மனைவி சுகாசினியின் நடத்தையில் தேஷ்முக்கிற்கு அண்மைக்காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவதற்காக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திடீரென்று மருத்துவமனைக்குச் சென்ற போது, அங்கே சுகாசினியும் அவரது கள்ளக்காதலன் அருண் காண்டேகரும் மருத்துவமனையில் அருகருகே அமர்ந்து இருந்திருக்கிறார்கள்.

கள்ள உறவுக்கு இடையூறு..!! கணவனுக்கு விஷ ஊசி..!! 33 நாட்கள் கோமாவுக்கு அனுப்பி கொன்ற மனைவி..!!

அப்போது கள்ளக்காதல் குறித்து தேஷ்முக் கேட்டபோது, 3 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே சுகாசினியின் கள்ளக்காதலன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். அதன் பின்னர் கணவர் தேஷ்முக்கை மருத்துவமனையின் கழிவறை அருகே அழைத்துச் சென்று அங்கே நின்று பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். சுகாசினியும் டாக்டர் என்பதால் கணவனை இதற்கு மேல் உயிருடன் வைத்திருந்தால், தனது கள்ள உறவுக்கு இடையூறாக இருப்பார் என்று நினைத்து அவரை கொன்று விட ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். அதன்படி, வெளியே சென்ற கள்ளக்காதலனை மருத்துவமனையின் கழிவறை அருகில் வரவழைத்து இருவரும் சேர்ந்து தேஷ்முக்கிற்கு விஷ ஊசி போட்டுள்ளனர்.

கள்ள உறவுக்கு இடையூறு..!! கணவனுக்கு விஷ ஊசி..!! 33 நாட்கள் கோமாவுக்கு அனுப்பி கொன்ற மனைவி..!!

இதனால், தேஷ்முக் கோமா நிலைக்கு சென்றுள்ளார். 33 நாட்கள் கோமாவில் இருந்த தேஷ்முக், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கெல்லாம், காரணம் தனது தாய் சுகாசினி தான் என்பதை உணர்ந்த தேஷ்முக் மகன் பரிஷத், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தேஷ் முக் இறந்ததும் சுகாசினியும் அவரது கள்ளக்காதலன் அருண் காண்டேகரும் தலைமறைவாகி விட்டனர். தேஷ்முக்கிற்கு சுகாசினி 2-வது மனைவி. இதற்கிடையே, சுகாசினியுடன் தனிக்குடித்தனம் நடத்துவதற்கு முன்பாக அவர் சுகாசினியுடன் தொடர்பில் இருந்த போது, முதல் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது, முதல் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் தற்கொலைக்கு தூண்டிய குற்றத்தில் தேஷ்முக் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.

Chella

Next Post

தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

Sun Oct 16 , 2022
தாயுடன் காணாமல்போன 2 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாயை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் தாஹோத் பகுதியைச் சேர்ந்த பதியா பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நித்தேஷ் தங்கரியா என்பவரின் பண்ணையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (அக்.15) மாலை வீடு திரும்பிய பதியா, ​தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் […]
தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

You May Like