தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில், பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Read More : ”அந்த காசு மட்டும் இருந்திருந்தா சேஷு உயிரோட இருந்திருப்பாரு”..!! டெலிபோன் ராஜ் கண்ணீர் மல்க பேட்டி..!!