fbpx

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் மாவட்ட திமுக!! பா.ஜ.க.வின் பண பலத்தை முறியடிக்க வேண்டும்…. துரைமுருகன் பேச்சு!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் மாவட்ட திமுகவினர் பா.ஜ.க.வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் லத்தேரியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிகாரப்பூர்வமாக இது தேர்தல் சம்மந்தப்பட்ட கூட்டம இல்லை என்றாலும் கூட இதில் சில விஷயங்கள் தேர்தல் பற்றி பேசப்பட்டது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஜெகத் ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், பா.ஜ.க. பூதமாக உருவெடுத்து வருகின்றது. பணம் அதிகாரம் பலத்தோடு அதனை நாம் முறியடிக்க நாம் வாக்குச்சாவடி குழுக்களை வலுவாக அமைக்க வேண்டும் என்றார்.

மேலும், எது எப்படி வந்தாலும் அதனை நாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அதகாரிகளும் பயப்படுவார்கள் மத்திய அரசும் பயப்படும் அதற்கு பின் நம்மிடம் அவர்கள் பேசுவார்கள். இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்க்க போகின்றோம். என அவர் பேசினார்.

Next Post

கஞ்சா போதை தலைக்கேறி ஷரத்தா கொலை…!! வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

Fri Nov 18 , 2022
கஞ்சா போதை தலைக்கேறி காதலி ஷ்ரத்தாவை கொலை செய்தேன் என்று அஃப்தாப் தெரிவித்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் வீசிய கொடூரமான காதலன் அஃப்தாப் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கஞ்சா பழக்கத்தை கைவிடுமாறு ஷ்ரத்தா கெஞ்சி கேட்டு கூட அதை விடவில்லை. ஒரு கட்டத்தில் இதன் காரணமாக இருவருக்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது […]

You May Like