fbpx

’தீபாவளி அதுவுமா இப்படியா நடக்கணும்’..!! பிரபல அரசியல் தலைவருக்கு நேர்ந்த சோகம்..!!

பிரபல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ளவர் இரா.முத்தரசன். 72 வயதான இவர் அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசனுக்கு, கடந்த 2 நாட்களாக கடுமையான சளி, இருமல் இருந்தது. அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், கோவிட் 19 பாதிப்பு கண்டறியப்பட்டது.

’தீபாவளி அதுவுமா இப்படியா நடக்கணும்’..!! பிரபல அரசியல் தலைவருக்கு நேர்ந்த சோகம்..!!

இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டொரு நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றபடி, தோழர் இரா. முத்தரசன் உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பெரும் அதிர்ச்சி : கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது ரயில்வே !!

Sun Oct 23 , 2022
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம் 3 வது முறையாக கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கட்டணத்தை தீபாவளி கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக முதலில் 10 ரூபாயாக இருந்த கட்டணத்தை ரூ 20 ஆக உயர்த்தியது பின்னர் அடுத்த முறையில் 30 ரூபாயாக உயர்த்தியது ரயில்வே நிர்வாகம். தற்போது ரூ.50 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.மும்பை ரயில் நிலையங்களில் மக்கள் […]

You May Like