தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், மாதாவரம் பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரத்தை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
- மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துப்பேட்டை மற்றும் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
- கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
- தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
- தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
- பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், காரைக்குடி, குமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விருதுநகர், ஊட்டி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்