fbpx

திமுக தலைவர் தேர்தல்..!! அக்.7இல் வேட்புமனு..!! தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!

திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திமுக 15-வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா காரணமாக இந்த ஆண்டு வரை நடைபெற்று வருகிறது. கடந்த செப்.22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 72 மாவட்டங்களில் 71 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 7 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

திமுக தலைவர் தேர்தல்..!! அக்.7இல் வேட்புமனு..!! தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!

இந்நிலையில் திமுக தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்றிய – நகர – நகரிய – பேரூர் – பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழு கூட்டம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.

திமுக தலைவர் தேர்தல்..!! அக்.7இல் வேட்புமனு..!! தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். இந்த பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 7ஆம் தேதி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நரபலி..?? புதையலுக்காக குழி தோண்டியவர் அதே குழியில் பிணமாக அமர்ந்திருந்ததால் அதிர்ச்சி..!!

Fri Sep 30 , 2022
புதையல் எடுக்க குழி தோண்டியவர், அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயம் செய்து வரும் லட்சுமணன், அவ்வப்போது புதையல் எடுப்பதாக கூறி புதையல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதையல் எடுக்க போவதாக […]
நரபலி..?? புதையலுக்காக குழி தோண்டியவர் அதே குழியில் பிணமாக அமர்ந்திருந்ததால் அதிர்ச்சி..!!

You May Like