fbpx

BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றியது திமுக..!! 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி..!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 67.97% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீதா லட்சுமி மற்றும் சுயேட்சைகள் உட்பட 46 பேர் களத்தில் இருந்தனர்.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எண்ணப்பட்ட 17 சுற்றுகளின் முடிவில் திமுக 1,14,439 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 23,810 வாக்குகளும் பெற்றுள்ளன.

Read More : அண்ணன் மனைவியுடன் அடிக்கடி..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!! தலைமறைவான கொழுந்தன்..!! திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

English Summary

It has been officially announced that DMK candidate Chandrakumar has won the Erode East constituency by-election.

Chella

Next Post

“புருஷன் செத்தாலும் பரவாயில்லை.. எனக்கு கள்ளக்காதலன் தான் முக்கியம்” சேலையை வைத்து மனைவி போட்ட பிளான்..

Sat Feb 8 , 2025
woman killed her husband for illicit relationship

You May Like