fbpx

”எல்லாம் உங்க இஷ்டத்திற்கு பண்ணிட்டு போறீங்க”..!! ”சீமான் கூட சமாதானம்”..!! வீரலட்சுமியை விளாசிய விஜயலட்சுமி..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நடிகை விஜயலட்சுமி விவகாரம் அனைவரும் அறிந்ததே. கடந்த மாதம் இறுதியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சீமான் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர் கொடுத்த கடிதங்களை வழங்கினர். அதில், தம் மீதான புகார்கள் குறித்து விளக்கம் கொடுத்தால் ஆஜராக தயாராக இருக்கிறேன் என சீமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீமான் வீட்டுக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்ப போலீசார் சென்றனர். அப்போது சீமான் தரப்பில் சம்மனை வாங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பின்னர் வழக்கறிஞர் மூலம் பெற்றுக்கொண்டார். மேலும், வரும் 18 ஆம் தேதி நேரில் ஆஜராவதாக கூறிய சீமான், விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், தான் விசாரணைக்கு ஆஜராகும் போது விஜயலட்சுமியும் வீரலட்சுமியும் விசாரணைக்கு வர வேண்டும் என்றும், மூன்று பேரிடமும் ஒன்றாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சீமான் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பேசிய தமிழர் முன்னேற்றபடை தலைவரான வீரலட்சுமி, விசாரணைக்கு வர தயார் என்றும் இந்த வழக்கில் சீமானின் மனைவி கயல்விழியும் தேன்மொழி என்ற பெண்ணும் விசாரணைக்கு ஆஜரானால் தானும் விஜயலட்சுமியும் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறோம்” என்றார்.

இந்நிலையில், வீரலட்சுமியின் இந்த பேச்சுக்கு விஜயலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த வீடியோவில், ”சீமான் சொல்லியிருக்கிறார்.. விஜயலட்சுமியையும் வீரலட்சுமியையும் வர சொல்லுங்க என்று.. இதற்கு வீரலட்சுமி ஒரு பதில் வீடியோ போடுறாங்க. அதில், நீங்க (சீமான்) வரும் போது கயல்விழியையும் தேன்மொழியையும் கூப்பிட்டுட்டு வாங்க என்று. நான் வீரலட்சுமியிடம் கேட்கிறேன். இந்த மாதிரி நான் பேசப்போகிறேன் என என்னிடம் டிஸ்கஸ் பண்ணீங்களா.. நீங்க இஷ்டத்துக்கு சீமானை எதிர்த்து போயிக்கொண்டு இருந்தீங்கன்னா.. நான் இந்த கேஸில் எதுக்கு?

நான் 18 ஆம் தேதி சீமானை சந்திக்கும் அவரிடம் சமாதானம் ஆகிவிட்டு பெங்களூரு கிளம்பி போயிடட்டுமா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? இது என்னோட கேஸா இல்லை இல்லை உங்க உங்களோட கேஸா? வர வரமாட்டேன் என்று சொல்லிட்டு இருந்தவர் 18ஆம் தேதி வரப்போறார்தானே.. அப்போ இது என்ன புது ட்விஸ்ட்.. கயல்விழியை கூப்டு வாங்க, தேன்மொழியை கூப்டு வாங்க என்றால் என்ன? உங்க இஷ்டத்திற்கு பண்ணிட்டு போய்ட்டு இருக்கீங்க.. நான் இதை வன்மையா கண்டிக்கிறேன். என் கிட்ட கேட்காமல் கேட்காமல் வீர லட்சுமி அவுங்க ரூட்டில் போயிட்டே இருக்காங்க… எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

எனக்கு சீமானை நேரில் பார்த்தால் நிறைய ஆதங்கம் இருக்கிறது.. நான் சீமான் 18 ஆம்தேதி வர்றேன் என்று சொல்வதை பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். வீர லட்சுமி என்னிடம் கேட்காமல் ஸ்டேட்மண்ட் ரிலீஸ் வெளியிட்டுட்டு இருந்தால் யாராவது இந்த கேஸை வைத்து விளையாடிட்டு இருந்தால்.. சீமானிடமும் நாம் தமிழர் கட்சியிடமும் சொல்லிவிட்டு நான் பெங்களூரு கிளம்பி போயிட்டே இருப்பேன். இது பெரிய எச்சரிக்கையாய் கொடுக்கிறேன். என்னையை வைத்து யாரும் பிளே பண்ணிட்டு இருக்காதீங்க” என்று பேசியுள்ளார்.

Chella

Next Post

லத்தி கொடிய ஆயுதம் அல்ல!… தடியடியால் அடித்து ஏற்படும் மரணம் கொலை ஆகாது!… தெலுங்கானா உயர் நீதிமன்றம்

Fri Sep 15 , 2023
ஒரு நபரை லத்தி அல்லது தடியால் தாக்கி மரணம் விளைவிப்பது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அர்த்தப்படுத்தாது, எனவே கொலைக்கு சமமான குற்றமற்ற கொலையாக கருதலாம் என்று தெலுங்கானா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. விவசாய வருமானத்தை கொடுப்பது தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில், பலத்த காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது போலீசார் தாக்கியதால் மரணம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான […]

You May Like