fbpx

’40 நாளா ஐஷூ எதுவுமே பண்ணல’..!! ’அவ வெளிய போக நீ தான் காரணம்’..!! நிக்சனை தாக்கிய அர்ச்சனா..!!

பிக்பாஸ் சீசன் இன்னும் ஒருசில நாட்களில் 50-வது நாளை எட்டவுள்ளது. தற்போது இன்றைய நாளுக்காக முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி, அதில் விசித்ராவிடம் ஆவேசமாக பேசிய நிக்சன் ‘நான் ஐஷுவிடம் செய்தது தவறு என்றால் மணி – ரவீனா செய்வதும் தப்பு, விஷ்ணு – பூர்ணிமா செய்வதும் தப்பு’ என்று கூறுகிறார். இதையடுத்து, ‘மரியாதையா பேசு’ என விசித்ரா சொல்ல, அதற்கு ‘நீங்க மரியாத கொடுத்தா நானும் மரியாத தருவேன், நீங்க யாரா வேணாலும் இருங்க’ என நிக்சன் கூறுகிறார்.

‘அர்ச்சனா தவறாக செல்வதற்கு காரணமே நீங்கதான்’ என்றும் கூறுகிறார். இதன் போது வந்த அர்ச்சனா ’40 நாளு இந்த வீட்டில் ஐஷு எதுவுமே பண்ணாமல் இருந்ததற்கு காரணமே அவ நிக்சனோட இருந்தது தான் என்று கூறியதோடு, எல்லாரும் ஒரு நாள் வெளியே போகத்தான் போகிறோம். அன்னைக்கு போய் நீ போய் பாரு, அப்போ உனக்கு உண்மை புரியும்’ என்று கூற திடீரென நிக்சன் அமைதியாகிறார். மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் எபிசோடு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிநவீன சிகிச்சைகள்..!! என்னதான் ஆச்சு..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Fri Nov 17 , 2023
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை […]

You May Like