fbpx

மக்களே அலர்ட்…! இந்த 67 மருந்தை பயன்படுத்த வேண்டாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..‌!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 67 மருந்துகள் தரம் இல்லாதவை என தெரியவந்துள்ளது. அவற்றில் ஒரு மருந்து தவறான வர்த்தக பெயருடன் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், உத்தரகண்ட் போன்ற வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், வலி, காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரம் இல்லாதவை என கண்டறியப்பட்டது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற மருந்துகளை விற்பனை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அதுபோன்ற மருந்துகளை விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

இல்லத்தரசிகளே குட்நியூஸ்!… சிலிண்டர் பாதுகாப்பு சோதனை இனி இலவசம்!

Wed Apr 24 , 2024
Cylinder safety: வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. எல்பிஜி சிலிண்டர்கள் அனைத்தும் சிறப்பு ஸ்டீலால் உருவாக்கப்பாட்டவை. மேலும், பாதுகாப்புக்காக சிலிண்டர் மேல் பாதுகாப்பு கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளன. பிஐஎஸ் தரநிலைகளுக்கு ஏற்ப சிலிண்டர்கள் உருவாக்கபடுகின்றன. இருப்பினும், எவ்வளவுதான் பாதுகாப்பாக கையாண்டாலும்கூட, சிலசமயங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து உயிரையே பறித்துவிடுகின்றன. எல்லா சிலிண்டர்களுமே குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும். புதிய […]

You May Like