fbpx

வசதி படைத்த நபர்களும் முக்கிய பிரமுகர்களும் ரேஷனில் பொருட்கள் வாங்குகிறார்களா? அறிக்கை தர உணவுத்துறை உத்தரவு..!

வசதி படைத்த நபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குகிறார்களா என்று விசாரணை செய்து பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நியாய விலைக் கடைகள் சரியாக செயல்படவும், உணவு பற்றாக்குறைகளை கலையவும் சரியான அடிப்படை தேவையுள்ள பொதுமக்கள் விரைவில் பயன்பெறவும் அதுகுறித்து ஆலோசிக்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பிறகு உணவுத்துறை அமைச்சகத்தால் பொது விநியோகத் திட்டத்தில் உள்ள துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வசதி படைத்த நபர்களும் முக்கிய பிரமுகர்களும் ரேஷனில் பொருட்கள் வாங்குகிறார்களா? அறிக்கை தர உணவுத்துறை உத்தரவு..!

மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவும், உணவுப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொருட்கள் வாங்க வருபவர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும் என்றும் மழைக் காலங்களில் மூட்டைகளை தரையில் வைக்காமல் மரப் பலகைகளை பயன்படுத்தி அதன்மேல் அடுக்கி வைத்து உணவுப்பொருட்களை பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வசதி படைத்த நபர்களும் முக்கிய பிரமுகர்களும் ரேஷனில் பொருட்கள் வாங்குகிறார்களா? அறிக்கை தர உணவுத்துறை உத்தரவு..!

மேலும் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை கண்டறிந்து அதை பிரிப்பதற்கான முன்மொழிவினை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வசதி படைத்த நபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதையும் விசாரனை செய்து பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் கொடுத்ததற்கு எதிர்ப்பு..! உச்சநீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ் தரப்பு..!

Thu Aug 4 , 2022
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதையடுத்து, வருவாய்த்துறையினர் அலுவலகத்திற்கு சீல்வைத்தனர். பின்னர், சீலை அகற்றக் கோரி எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை […]
ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி? தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!

You May Like